தமிழ்நாடு காவல்துறையின் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான பிரிவானது, காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் செயல்படுகிறது. இப்பிரிவானது கூடுதல் காவல்துறை இயக்குநர் (சட்டம் & ஒழுங்கு) மற்றும் IGP (General) அவர்களின் நேரடி கண்காணிப்பில் கடந்த ஜீன் 2022 முதல் இயங்கி வருகிறது. இப்பிரிவானது அயல்நாடுகளில் இருக்கும் தமிழர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களது புகார்களை பிரத்தியேகமாக கையாள்கிறது.
இப்பிரிவின் முக்கிய செயல்பாடு, அயலகத் தமிழர்களிடமிருந்து வரப்பெறும் புகார்களைப் பெறுவதும், அதை சம்பந்தப்பட்ட காவல் நிலையம் / பிரிவுக்கு விசாரணைக்காக அனுப்புவதும், சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து மாதாந்திர அறிக்கைகள் சேகரிக்கப்பதுமாகும்.
இப்பிரிவுக்கு முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்ய எந்த அதிகாரமும் இல்லை, உள்ளூர் காவல் நிலையம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
காவல்துறையின் வெளிநாடு வாழ் தமிழர் பிரிவின் இணையதளம் :
https://www.nricell.tn.gov.in/