தமிழ் வெல்லும்
ஆழி சூழ் அண்டத்தில், பேரேழு கண்டத்தில்,
திரவியம் தேடும் தமிழ் இனமே,
நீவீர் சென்ற இடமெல்லாம்
அடர் வனங்களும் சோலையாச்சு .
பாலையும் சீர்மிகு தேசமாச்சு, ..
வெற்றி உங்கள் வசமாச்சு,
பதிவு செய்ய
நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர்,
எனில் தமிழர்களே, நீவீர் இன்றி ஏது இந்த உலகு,
உலகத்தமிழர்களின் ஒன்று கூடல் – ஆம்,
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் அறிவிப்பு,
ஆண்டுதோறும் தமிழினத்தின் ஒன்று கூடல்,
களிப்பதற்கு மட்டுமின்றி வாழ்க்கை செழிப்பதற்கும்,
இம்முறை சிங்கார சென்னையிலே சங்கமிப்போம்,
சங்கநாதம் இசைப்போம்,
“அயலகத் தமிழர் தினம்”,
11.01.2024 மற்றும் 12.01.2024
பதிவு செய்ய